பாராலு முழவாலும் பயிராக்கி யுயிர்வளர்க்கும்.
பேராளர் தம்மாலே பிறருடைய பெருமையெல்லாம்,
ஏராலெண்டிசை வளர்க்கும் எழுபத்தொன்பது நாட்டில்,
காராளர் பெருமையெல்லாம் கண்ணாளர் கைத்தொழில்,
பாரின் வளம் பயிரின் வளம் பரந்த புகழ் பெருக்காளர்,
ஏரின்வள மிந்தவள மெவ்வளவுண்டவ்வளவும்,
காரின்வள மனையகொடைக் கண்ணாளர் கைத்தொழிலின்,
சீரின்வள மல்லாத சிறப் புண்டோ செப்பீரே,
வண்டாரும் பொழிற்கங்கை வாளார்ந்த நான்முகத்துக்,
கொண்டாடிக் கொண்டமுடி கொடுத்தாரே யெங்குமணங்,
கண்டாரே கலியுகத்திற் கண்ணாளர் தம்மை யல்லால்,
உண்டாகிய பிறருளரோ வுளராகி லுறையீரே,
காதலால் நிதிவழங்குங் கண்ணாளர் கைத்தொழிலி,
னோதலால் வளவியதோ ரோங்கியருலத் துக்கதோ,
கோதிலா விளைவயலைக் கொழுவாலுங் கருவாழும்,
ஆதாலாலவர் பெருமை யாருரைக்க வல்லாரே.
பண்ணான வேழிசைக்கும் படையான வாணிபர்க்கும்,
எண்ணான எழுத்தினுக்கும் இயலான உயிர்களுக்கும்,
மண்ணான மன்னவற்க்கும் வாழ்தொண்டை நாட்டார்க்கும்,
கண்ணாளர் கைத்தொழில்போலுண்டாகிற் காட்டீரே.
கலையிட்ட கண்ணாளர் கைத்தொழின் றாமாகி,
னிலையிட்டு முடிப்பாரார் நித்தருமா தான்பணிந்து,
உலையிட்ட கருவிகளா முயர்கருவி வீழாமே,
தலையிட்ட செம்பியனுந் தலங்காக்க மாட்டனே,
அன்னை யெனமுதலாய வம்புவியல் யாவதற்கு,
முன்னையமு தூட்டுவதும் பெருக்காள ருழவன்றோ,
மன்னிய சீர்முதலாய் வழிவந்த தொல்குலத்தோர்,
கன்னிமுதற் றிருவாளர் கண்ணாளர் தம்மாலே.
மேற்கோள் நூல்;- வேலூர் தீர்ப்பு,
நூல் வெளியீடு;- சென்னை;சிந்தாதிரிப்பேட்டை,
விஸ்வகுலோத்தாரண அச்சியந்திரசாலைற்
அச்சடிக்கப்பட்டது.
1913-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக